தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மத்தியப்பிரதேசத்தில் ஒரே ஆண்டில் 23,129 பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்!!

போபால்: மத்தியப்பிரதேசத்தில் 2024, ஜனவரி 1 முதல் 2025 ஜூன் 30 வரை மாநிலத்தில் காணாமல்போன பெண்கள் மட்டும் சிறுமிகளின் எணிக்கை பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளின் நிலை, கைது செய்யப்பட்ட மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளியின் விவரங்கள் குறித்து சட்டைப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் முத்த சட்டமன்றம் உறுப்பினருமான பாலா பச்சன் எழுப்பிய கேள்விக்கு மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில் 2025 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தம் 23,129 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 292 பேரும், சிறுமிகளை வன்கொடுமை செய்த 282 பேரும் என மொத்தம் 575 பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 443 பேரும், சிறுமிகள் மீதான வழக்குகளில் 167 பேரும் என மொத்தம் 610 குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய 1,500க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.