தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொல்லிமலை மலைப்பாதையில் விபத்து; 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து டிரைவர் பலி: 7 மாணவர்கள் படுகாயம்

சேந்தமங்கலம்: கொல்லிமலை மலைப்பாதையில் 2வது கொண்டை ஊசி வளைவு அருகே 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து டிரைவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு செல்லிப்பட்டியை சேர்ந்தவர் குழந்தையன் மகன் ஜெயக்குமார் (23). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று சேந்தமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வரும் திவாகர், மணிகண்டன், இலங்கேஸ்வரன், முருகன், விஸ்வநாதன், கதிர், கவின் ஆகிய 7 மாணவர்களை ஏற்றி கொண்டு கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

காரவள்ளி சோதனைச்சாவடியில் இருந்து கார் மலைப்பாதையில் சென்றது. அப்போது, 2வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியவுடன் சிறிது நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி, 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், கார் நொறுங்கியது. டிரைவர் ஜெயக்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவர்கள் 7 பேரும் படுகாயமடைந்தனர்.

தகவலின்பேரில், வாழவந்தி நாடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமாரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.