தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொளத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆய்வு

Advertisement

பெரம்பூர்: பல்வேறு துறை சார்ந்த சேவைகள் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் வார்டு வாரியாக திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. எந்த வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது என்பதை முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவித்து அவர்கள் தங்களுக்கு தேவையான அரசு சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்ட முகாம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அந்த வகையில். தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 69வது வார்டில் இன்று காலை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டனர்.

பின்னர், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு, உடனடி தீர்வு காணும்படி அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி உடனடி தீர்வு காணக்கூடிய மனுக்களுக்கு அதிகாரிகள் தீர்வு கண்டு, நகல்களை பொதுமக்களிடம் வழங்கினர். முகாமில், திருவிக நகர் மண்டலக்குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், சந்துரு, திருவிக நகர் மண்டல பொறுப்பு அதிகாரி முருகன், செயற்பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement