தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டவுடன் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

சென்னை: கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்ட உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் கட்டப்பட்ட பிறகு சுமார் 17 லட்சம் பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

Advertisement

அவ்வப்போது முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 16ம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட போது, 8 மீட்டர் உயரத்தில் ஆர்ச்சில் உள்ள போல்டுகளை சரி செய்யும் பொழுது சுத்தியல் கை தவறி விழுந்து விட்டது. அதன் விளைவாக கண்ணாடியின் மேல் பகுதியில் மட்டும் மெல்லிய விரிசல் ஏற்பட்டது. உடனடியாக சேதமடைந்த இடத்தில் மட்டும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி தடுப்பாண்கள் அமைக்கப்பட்டது. கண்ணாடி பாலத்தின் தாங்கும் திறன் வலுவாகவும் தரமாகவும் உள்ளது. அங்கு பயன்படுத்தியுள்ள கண்ணாடியானது ரையின்போர்ஸ் (reinforced glass) ஆகும்.

பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை ஒப்பந்ததாரரிடம் தெரிவிக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட கண்ணாடியை 2 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், அதே வடிவமைபில் அதே தரத்துடன் கம்பி இழையிலான கண்ணாடி கடந்த 8ம் தேதி இரவு பொருத்தப்பட்டது. மேலும், போதுமான எடையினைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாங்குதிறன் உறுதி செய்யப்பட்டதில் கண்ணாடி பாதுகாப்பாக உள்ளது. 77 மீட்டர் நீளமுடைய கண்ணாடி பாலத்தில், ஒரே நேரத்தில், 650 நபர்கள் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரரின் பராமரிப்பு காலம் 10 ஆண்டு காலம் என்பதால், சேதமடைந்த கண்ணாடியினை ஒப்பந்ததாரரின் செலவிலேயே சரி செய்யப்பட்டுவிட்டது.

தற்போது, அனைத்து பார்வையாளர்களும், கண்ணாடி பாலத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். விரிசல் ஏற்பட்ட கண்ணாடி பாலத்திலும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நடத்து சென்றுகொண்டிருந்தனர். இதனாலும் பாலத்தில் எந்த பாதிப்பும் ஏற்பட்டவில்லை. எனவே கண்ணாடி பாலம் குறித்து அச்சப்பட தேவையில்லை. மேலும் பாலம் கட்டும் போது இருந்த பாதுகாப்பு, உறுதி தன்மை தற்போதும் உள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் 650 பேர் நிற்கும் அளவிற்கு தாங்கும் திறன் கொண்டது. உலக சுற்றுலா பயணிகள் பாராட்டும் அளவிற்கு கண்ணாடி பாலம் அவ்வளவு உறுதி தன்மையுடன் உள்ளது. நாள் ஒன்றுக்கு 8000 நபர்கள் வரை கண்ணாடி பாலத்தில் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இது மேலும் அதிகரிக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement