தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: வைரமுத்து கோரிக்கை

சென்னை: ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது,

இந்தியப் பிரதமர் அவர்களே!

தங்களின்

விடுதலைத் திருநாள் பேருரைக்கு

மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த

தங்கள்

என் ஜனநாயக வணக்கம்

தமிழ்நாட்டிலிருந்து

ஓர் இந்தியனாக எழுதுகிறேன்

தாங்கள்

காலமெல்லாம் போற்றிவரும்

திருக்குறள்

இனம் மொழி மதம் நாடுகடந்த

உலகத்தின் அசைக்கமுடியாத

அறநூல்

மனிதம் என்ற

ஒற்றைக் குறிக்கோளை

உயர்த்திப் பிடிப்பது

அதனை

இந்தியாவின் தேசிய நூலாக

அறிவிக்க வேண்டும் என்பது

தமிழர்களின் நீண்ட கனவு

மற்றும்

நிறைவேறாத கோரிக்கை

இந்தியாவின்

79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்

திருக்குறள்

இந்தியாவின் தேசிய நூலாக

அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை

வெளியிட வேண்டுகிறோம்

தாங்கள்

கேட்டுக்கொண்ட வண்ணம்

நமோ செயலியிலும்

இதனைப் பதிவிடவிருக்கிறோம்

இது

உலகப் பண்பாட்டுக்கு

இந்தியா கொடுக்கும் கொடை

என்று கருதப்படும்;

ஆவனசெய்ய வேண்டுகிறோம்

ஆகஸ்ட் 15 அன்று

தொலைக்காட்சி முன்னால்

ஆவலோடு காத்திருப்போம். இவ்வாறு தெரிவித்தார்.

Related News