பழைய வாகன கழிவு குப்பையில் பயங்கர தீ; மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு
Advertisement
இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் திடீரென கழிவு குப்பையில் இருந்து லேசாக புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது. தீயில் அங்கு கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் மற்றும் ரெக்சின் பொருட்கள் எரிய துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவயிடத்துக்கு மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் அணில் குமார் தலைமையில் இரு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. எனினும், இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement