தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழைய வாகன கழிவு குப்பையில் பயங்கர தீ; மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பழைய வாகன கழிவு குப்பையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம், சங்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளது. இங்கு பழைய வாகனங்கள் உடைக்கப்பட்டு அதில் தேவையான பாகங்களை எடுத்து வைத்துக் கொண்டு மற்றவை விற்பனைக்காக வைக்கப்படுகின்றன. இங்கு சேகரமாகும் வாகனங்களின் கழிவுகள் சங்கர் நகர் பகுதியில் உள்ள குப்பைகளில் மொத்தமாக கொட்டப்படுகின்றன.
Advertisement

இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் திடீரென கழிவு குப்பையில் இருந்து லேசாக புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது. தீயில் அங்கு கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் மற்றும் ரெக்சின் பொருட்கள் எரிய துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவயிடத்துக்கு மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் அணில் குமார் தலைமையில் இரு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. எனினும், இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement