தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நெல்லை சுப்பிரமணியபுரத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: தீயை கட்டுக்குள் கொண்டுவர 3 மணி நேரமாக வீரர்கள் முயற்சி

நெல்லை: நெல்லை சுப்பிரமணியபுரத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதி சேர்ந்தவர் சங்கர பாண்டியன். இவருக்கு சுப்பிரமணியபுரத்தில் ஒரு பழைய பிளாஸ்டிக் குடோன் சொந்தமாக உள்ளது. இங்கு டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் பழைய பொருட்கள் சேகரித்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடோனுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் பழைய பொருட்கள் மீது தீப்பிடிக்க தொடங்கியது. இந்த தீயானது மளமளவென அருகில் இருக்க கூடிய பிளாஸ்டிக்கில் பரவ தொடங்கியது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக கட்சி அளித்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கு மேல் தீ எரிந்து கொண்டு இருந்ததால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் பழையகோட்டை, பேட்டை, முல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 15க்கு மேற்பட்ட வண்டிகளில் தண்ணீரை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Related News