தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எம்பிக்களை சிஐஎஸ்எஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தம்.. அவைக்குள் ராணுவ நடவடிக்கை ஏன்?: திருச்சி சிவா பேட்டி

டெல்லி : வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் ஆளும் ஒன்றிய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனைக்கு குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டால் மத்திய தொழிற்படை பாதுகாவலர்கள் மூலம் ஒன்றிய அரசு மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில், ஆளும் பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாக திருச்சி சிவா தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் அசாதாரண சூழலை ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே உருவாக்குகின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி குரல் எழுப்பினோம். அவை மையப்பகுதிக்கு செல்ல முற்பட்டபோது எம்.பி.க்களைசி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பெண் எம்.பி.க்களை கூட வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர். தீவிரவாத தாக்குதலை தடுக்க வந்ததை போன்ற அச்ச உணர்வை வீரர்கள் எற்படுத்தினர். இதுவரை இல்லாத வகையில் அவையில் பாதுகாப்புப் படை வீரர்கள் நடந்து கொள்கின்றனர். அவையில் துணை ராணுவ படையினர் நுழைந்தது ஏதோ ராணுவ நடவடிக்கை எடுப்பது போன்று இருந்தது."இவ்வாறு தெரிவித்தார்.