தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை - அவசரத் தேவை உள்ளவர்கள் கவனத்திற்கு!

சென்னை: செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைப்புப் பணி காரணமாக சென்னையில் இன்று காலை 8 மணி முதல் ஆக.1 இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது.
Advertisement

பாடி முகப்பேர், கொரட்டூர், புழல், சூரப்பட்டு, திருமங்கலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஷெனாய் நகர், சாந்தி காலனி, வள்ளுவர் கோட்டம், எம்எம்டிஏ காலனி, சேத்துப்பட்டு, மகாலிங்கபுரம், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, கோபாலபுரம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, மயிலாப்பூர், தியாகராயநகர், சேப்பாக்கம், விருகம்பாக்கம், நந்தனம், ஆர்.ஏ.புரம், ஆழ்வாட்பேட்டை, ஐஸ்ஹவுஸ், மேற்கு மாம்பலம், சாலிகிராமம், வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், நெளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், காரம்பாக்கம், போரூர்,

வளசரவாக்கம், நெசப்பாக்கம், சைதாப்பேட்டை, பழவந்தாங்கல், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், ஆலந்தூர், தில்லை நகர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், மந்தவெளி, வேளச்சேரி, அடையாறு, தரமணி, திருவான்மியூர், பெசன்ட்நகர் பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் முதல் புறவழிச்சாலை வரை குழாய் பதிப்பு பணிகள் நடப்பதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. புதிதாக அமைத்த 2-வது வரிசை குடிநீர் குழாயை பயன்பாட்டில் உள்ள குழாயுடன் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement