தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அன்புமணி பேச்சு

திருவள்ளூர்: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று அன்புமணி கூறினார்.‘’தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை திருவள்ளூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தன்னுடைய நடைபயணத்தை மேற்கொண்டார். இதற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் அம்பத்தூர் கே.என்.சேகர், ஆலப்பாக்கம் லயன் ஏ.ஆர்.டில்லிபாபு, வ.பாலா என்கிற பாலாயோகி, நா.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.இதில், அன்புமணி பேசியதாவது;

டாக்டர் ராமதாஸ் எதற்காக பாமகவை தொடங்கினார். சமூக நீதி போராளி டாக்டர் ராமதாஸ் எதற்காக இந்த கட்சியை தொடங்கினார் தெரியுமா? அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் முன்னேறவேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராமதாஸ் பாமகவை தொடங்கினார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால்தான் பின்தங்கிய சமூகங்களின் உண்மையான நிலையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்க முடியும்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து முடித்துவிட்டன. சில மாநிலங்கள் தற்போது எடுத்துக்கொண்டிருக்கின்றன. எனவே தமிழகத்திலும் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.