தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் இடமில்லை; எடப்பாடி பழனிசாமி நாகரீகமாக பேச வேண்டும்: முத்தரசன் எச்சரிக்கை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தளியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பிரசார பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை காணவில்லை, தேய்ந்து போய்விட்டது. மறைந்து போய்விட்டது. முகவரியை தேடிக் கொண்டிருக்கிறோம் என கீழ்த்தரமான பேசினார். வரும் 18ம் தேதி சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மற்றும் பேரணி நடைபெற உள்ளது. அன்றைய தினம், எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை நிறுத்தி விட்டு, சேலத்தில் நடக்கும் பேரணியை பார்த்து இந்திய கம்யூனிஸ்ட் எப்படிப்பட்ட கட்சி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த அரசியல் கட்சி தலைவரும், பிற கட்சி தலைவர்களையும், கட்சிகளையும் ஒருமையில் பேசுவது என்பது மிக மிக அநாகரீகமானது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, பிரசாரத்தில் தமிழக முதலமைச்சரையும், எங்கள் கட்சி தலைவர்களை பற்றியும் ஒருமையில் பேசி வருகிறார். இது அவர் வகித்த பொறுப்புக்கு அழகல்ல. அவர் நாகரீகமாக பேச வேண்டும். பாஜக ஒருபோதும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டும் என்பதற்காகத்தான், எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா வளைத்து பிடித்துள்ளார். மோடியும் அவரை திருச்சியிலே சந்தித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சுய சிந்தனையோடு இருக்கிறார்கள். வகுப்புவாத சக்தியான, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படும் பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் அளிக்க மாட்டார்கள். வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related News