தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

43 ஆண்டுகள் பழமையானஆலங்குளம் பேருந்து நிலையம்: அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் பயணிகள் அவதி

தென்காசி: அடிப்படை வசதி இல்லாத ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பணிகளை விரைவாக தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரான அலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையம், 43 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பேருந்து நிலையத்தில் 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 43 ஆண்டுகள் பழமையான இப்பேருந்து நிலையம் பொலிவிழந்து இருந்து காணப்படுகிறது. கழிவறைகள் பராமரிப்பின்றி இருந்ததால் சில மாதங்களுக்கு முன்னரே இடித்து அகற்றப்பட்டது. மிகவும் குறுகலாக இடத்தில் உள்ள கழிவறையை மக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

அதுவும் போதிய பராமரிப்பின்மை காரணமாக துர்நாற்றத்துடன் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அடிப்படை தேவையான குடிநீர் வசதி கூட இங்கு இல்லை. பேருந்து நிலையத்தை நவீனமாக மேம்படுத்தும் நோக்கில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கீழ் 4.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 கடைகளுடன் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. எனினும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடி தீர்வாக குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்துவதுடன், புதிய கட்டுமான பணிகளையும் விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News