தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடி அமாவாசை: கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்!!

தூத்துக்குடி: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் குடுத்து புனித நீராடி வழிபாடு மேற்கொண்டனர். ராமேஸ்வரத்தில் அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும் பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பல்வேறு மாவட்டங்கள் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் குடுத்து வழிபட்டனர். மேலும் காவேரி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் படித்துறையில் உள்ளுர் மீனவர்களோடு, தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவேரி ஆற்றில் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவேரியில் புனித நீராடினர்.

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் ஏராளமான மக்கள் தவித்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related News