தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை எழும்பூர் - சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பொதுப்பெட்டிகள் இணைப்பு!

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்ததாவது; மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்.22157), வரும் செப்டம்பர் 5ம் தேதி முதலும், மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22158), வரும் செப்டம்பர் 8ம் தேதி முதலும், ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி, ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக, 2-வது வகுப்பு பொதுபெட்டி 2 இணைத்து இயக்கப்பட உள்ளது.
Advertisement

சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22154), வரும் செப்டம்பர் 6ம் தேதி முதலும், மறுமார்க்கமாக, சேலத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22153), வரும் செப்டம்பர் 7ம் தேதி முதலும், ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி, ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக 2-வது வகுப்பு பொது பெட்டி 2 இணைத்து இயக்கப்பட உள்ளது.

மராட்டிய மாநிலம் தாதரில் இருந்து புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (11021), வரும் செப்டம்பர் 9ம் தேதி முதலும், மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து புறப்பட்டு தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (11022), வரும் செப்டம்பர் 11ம் தேதி முதலும், ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக 2-வது வகுப்பு பொது பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது.

 

Advertisement

Related News