தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணத்துக்கு பஞ்சமே இல்லை எனது மூளையைப் பயன்படுத்தி மாதம் ரூ.200 கோடி சம்பாதிப்பேன்: கட்கரி பரபரப்பு பேச்சு

 

Advertisement

நாக்பூர்: எனது மூளையைப் பயன்படுத்தி மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க முடியும் என, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். ஒன்றிய அரசு பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்தியது. புதிதாக தயாரிக்கப்படும் வாகன இன்ஜின்கள் இதற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றன. பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த முடிவால், கட்கரியின் மகன்கள் நடத்தும் முன்னணி எத்தனால் நிறுவனங்கள் பலனடைவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக இன்ஜின் பழுதாவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘மாதம் ரூ.200 சம்பாதிக்கும் அளவுக்கு எனக்கு மூளை இருக்கிறது. எனக்கு பணத்துக்கு ஒன்றும் பஞ்சமில்லை. அதற்காக அலையவும் இல்லை. சம்பாதிக்க எனது மகன்களுக்கு யோசனை கூறி வருகிறேன். எனது மகன் சமீபத்தில் ஈரானில் இருந்து 800 கன்டெய்னர் ஆப்பிள் இறக்குமதி செய்துள்ளார். இந்தியாவில் இருந்து ஈரானுக்கு 1,000 கன்டெய்னர் வாழைப்பழம் ஏற்றுமதி செய்துள்ளார். இதற்காக ஈரானுடன் எந்த உடன்படிக்கையும் கிடையாது. எனக்கு சொந்தமாக சர்க்கரை ஆலை, சாராய ஆலை, மின் உற்பத்தி ஆலைகள் உள்ளன என்றார்.

 

Advertisement