தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்வீடன் கல்வி நிலையத்தில் துப்பாக்கிசூடு: 11 பேர் பலி

Advertisement

ஸ்டாக்கோம்: ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது இப்பள்ளி. இதில் புலம் பெயர்ந்தோர்களுக்கு ஸ்வீடிஷ் வகுப்புகளும் செயல்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்வி நிலையத்தில் நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்திய நபரும் இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

எனினும் தாக்குதல் நடத்தியவர் யார், அவரின் நோக்கம் என்ன? எத்தனை பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறித்து தகவல் இல்லை. இந்த சம்பவம் குறித்து ஸ்வீடன் பிரதமர் உல்ப், ‘‘முற்றிலும் அப்பாவிகள் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. இது ஸ்வீடன் வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல். பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதற்கான பதில்களை என்னால் அளிக்க முடியாது’’ என்றார். ஸ்வீடனில் உள்ள பள்ளிகளில் துப்பாக்கிசூடு சம்பவங்கள் மிக அரிதானதாகும். ஆனால் தற்போது துப்பாக்கிசூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News