தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துப்பாக்கி சுடும் தளத்தில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து ஒருவர் காயம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் ஆர்பிஎப், சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணுவத்தினர் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் என இலக்குகளை நோக்கி சுட்டு அவர்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 300 மீட்டர், 500 மீட்டர் வரை துப்பாக்கி மற்றும் எஸ்எல்ஆர் ஆகிய துப்பாக்கிகளுக்கான சுடுதளமும் இயங்கி வருகிறது. இதில் 2 கிலோ மீட்டரில் இருந்து சுடும் ராக்கெட் லாஞ்சர்கள் மலையில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க வேண்டும்.
Advertisement

இப்படி தாக்கி அதனுடைய அலுமினியம், பித்தளை போன்ற உதிரி பாகங்கள் சிதறி கிடக்கும். இவற்றிற்கு நல்ல கிராக்கி உள்ளதால் இப்பகுதியில் உள்ள மக்கள் அவற்றை துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகு பொறுக்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ராக்கெட் லாஞ்சர் கொண்டு சென்றபோது அது கீழே விழுந்து வெடித்ததில் அப்பகுதியில் உள்ள மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதற்கு ஏற்றார்போல் நேற்று அனுமந்தபுரம் பகுதியில் வசிக்கும் கோதண்டன் (52) என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்துச் சென்று, தான் வைத்திருந்த கத்தியால் உடைத்தபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது கோதண்டன் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மறைமலைநகர் காவல் துறையிடம் விசாரணை மேற்கொண்டபோது, இது ராணுவத்திற்கு சொந்தமான பொருள். இதை யாரும் எடுத்துச் சொல்லவோ, அல்லது பொறுக்கிச் செல்லவா கூடாது.

அப்படி செய்தால் தேசிய வெடிமருந்து சட்டத்திற்கு அவர்கள் கைது செய்யப்படலாம். ஆனால் இப்பகுதியில் உள்ள மக்களின் அறியாமையின் காரணமாக இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாக ராணுவ தரப்பிலிருந்தும் காவல்துறை தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News