தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாரணாசி ஐஐடி விடுதியில் அதிர்ச்சி; சக மாணவர்கள் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்தவர் சிக்கினார்:போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு

Advertisement

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஐஐடி வளாகத்தில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில், கெமிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் ஒருவர், சக மாணவர்கள் குளிப்பதை நீண்ட காலமாக ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார். குறிப்பாக விடுதியின் 8, 9 மற்றும் 10வது தளங்களில் தங்கியுள்ள மாணவர்களே குறிவைக்கப்பட்டுள்ளனர். விடுதியின் குளியலறைக்கு மேலிருந்து தனது செல்போன் மூலம் இந்த வீடியோக்களை அவர் பதிவு செய்து மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாணவர் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றபோது, குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

 

அவரது செல்போனை சோதனையிட்டதில், 7 முதல் 8 சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த ஐஐடி நிர்வாகம், மாணவரின் செல்போனைக் கைப்பற்றியது. ஆனால், பல மணி நேரமாகியும் குற்றம்சாட்டப்பட்ட மாணவர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாததால், மற்ற மாணவர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் லங்கா காவல் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட மாணவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை, இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகம் தொடர்பான சம்பவம் எனக் கூறி, மேல் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Advertisement

Related News