தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இறந்தவரின் உடலில் இதயத்தை காணோம்: 4 வாரங்களுக்கு பிறகு கண்ட அதிர்ச்சி

கான்பெர்ரா: இறந்த நபரின் உடலில் இதயத்தை காணவில்லை என குடுப்பதினார் அளித்த புகார் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. 23வயதான பைரேல் என்ற நபர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்தவர். இவர் பாலிக்கு சுற்றுலாக்காக சென்றுள்ளார். அப்போது பாலியிலுள்ள தனியார் வில்லாவில் இருக்கும் ஒரு குளத்தில் மயக்கம் அடைந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியா அதிகாரிகள் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக மௌனத்துக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

இந்த வழக்கு நான்கு நாட்களுக்கு பிறகு தான் போலீசில் புகார் செய்யப்பட்டதாகவும், அதிகாரிகள் அங்க சென்றபோது அந்த இடம் ஏற்கனவே மாசுபட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்து நான்கு வாரங்களுக்கு பிறகு பைரலின் உடல் ஆஸ்திரேலியாவில் உள்ள அவர் வீட்டுக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அங்க அவருக்கு இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட போது அவரது இதயம் காணாமல்போனதை அவரது பெற்றோர் கண்டறிந்தனர். இதனையடுத்து குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்து புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதயம் பாலியில் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் அதே நேரத்தில் எங்களது ஒப்புதல் இல்லாமல் எப்படி இந்த செயல் நடந்தது, யார் இதை செய்தது என குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். இந்தோனேசியா அதிகாரிகள் பைரலின் மரணத்தை நீரில் மூழ்கி இறந்ததாக அறிவித்தாலும் அவரது குடும்பத்தினர் அதை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். அவரது தாயார் பைரலின் உடலில் வெட்டுக்காயம் இருந்ததாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். இறந்தவரின் உடலில் இதயம் காணாமல் போன சம்பவம் குறித்தன செய்தி அதிரிச்சி ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்தோனேசியா அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

Advertisement

Related News