தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பருப்பு குழம்பு தரமில்லாததால் கேன்டீன் ஒப்பந்ததாரருக்கு ‘பளார்’ விட்ட சிவசேனா எம்எல்ஏ: மகாராஷ்டிராவில் பரபரப்பு

Advertisement

மும்பை: மகாராஷ்டிராவில் பருப்பு குழம்பு தரமில்லாததால் கேன்டீன் ஒப்பந்ததாரரை சிவசேனா எம்எல்ஏ ஒருவர் அறைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) எம்.எல்.ஏ.வான சஞ்சய் கெய்க்வாட், ஏற்கனவே பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி அசிங்கப்படுபவர் ஆவார். கடந்த ஆண்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நாவை வெட்டுபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவதாகக் கூறி பெரும் புயலைக் கிளப்பினார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தற்போதைய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் போன்ற தலைவர்களைத் தரக்குறைவாக விமர்சித்தும் செய்திகளில் இடம்பிடித்தவர் ஆவார்.

புல்தானா தொகுதி எம்எல்ஏவான இவர், தனது அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் தொடர்ந்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், மும்பையில் உள்ள ஆகாஷ்வானி எம்.எல்.ஏ குடியிருப்பில் தங்கியிருந்த சஞ்சய் கெய்க்வாட், அங்குள்ள கேன்டீனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட உணவின் பருப்புக் குழம்பு மிகவும் தரம் குறைந்து இருப்பதாக கூறி, கேன்டீன் ஒப்பந்ததாரருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர், அந்த உணவுப் பொட்டலத்தை ஒப்பந்ததாரரை முகரச் சொல்லிவிட்டு, திடீரென அவரது முகத்தில் ஓங்கிக் குத்தினார்.

அந்தத் தாக்குதலில் நிலைதடுமாறி ஒப்பந்ததாரர் கீழே விழ, மீண்டும் எழுந்த அவரை மறுபடியும் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரத்தை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எழுப்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஒப்பந்ததாரரை ஆளுங்கட்சி எம்எல்ஏ அறைந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News