வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கட்சியினர், போலீசார் பயங்கர மோதல்: 4 பேர் பலி; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
அதன்ஒரு பகுதியாக, ஷேக் ஹசீனாவின் முன்னோர்கள் வாழ்ந்த கோபால்கஞ்ச் நகரிலும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று பேரணி தொடங்கியது. அப்போது அங்கு திரண்ட அவாமி லீக் கட்சியினர் பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். வாகனங்களை தீயிடடு கொளுத்தினர். மேலும் பேரணிக்கு பாதுகாப்பாக சென்ற காவல்துறையினர் மீதும் அவாமி லீக் கட்சியினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து கோபால்கஞ்ச் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.