தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சண்முகசுந்தரபுரம்-ஜம்புலிபுத்தூர் இடையே சேதமடைந்து காணப்படும் இணைப்புச் சாலை

*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Advertisement

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்திலிருந்து ஜம்புலிபுத்தூர் ரெங்கசமுத்திரம், வைகை அணை செல்லும் இணைப்பு சாலை மிகவும் சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனை சீரமைத்து, புதிய தார்ச்சாலை அமைத்து தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வைகை அணை சாலையில் உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்திற்கும் மற்றும் ரெங்கசமுத்திரம் கிராமத்திற்கும் இணைப்புச் சாலை உள்ளது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த இணைப்பு சாலை போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில் தற்போது சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த சாலையில் பல இடங்களில் சாலை அமைக்கப்பட்டதற்கான அடையாளமே இல்லாத வகையில் கற்குவியலாகவும் பள்ளம் மேடாகவும் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த சாலையின் இருபுறமும் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ள நிலையில் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மேலும் சாலையின் இடையே ஜம்புலிபுத்தூர் கண்மாய் உள்ளது. சாலையின் இரு புறமும் கண்மாய் இருப்பதால் சாலையில் இருந்து சுமார் 10 அடிக்கு மேல் பள்ளம் உள்ளது. இந்த சாலையில் தினம் தோறும் பயணிப்பவர்கள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் இரண்டு தனியார் பள்ளிகளும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளதால் பள்ளிக்கு செல்லும் பள்ளி வாகனங்கள் மாணவர்கள் அனைவரும் இந்த சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பயணிக்கும் போது பள்ளி வாகனத்தில் செல்லும் குழந்தைகளும் மிகுந்த அச்சத்துடனே தினந்தோறும் சென்று வருகின்றனர்.

சாலையின் இரண்டு பகுதியிலும் தடுப்புகள் இல்லாததால் கண்மாய்க்கான பள்ளம், விவசாய நிலம், விவசாயக் கிணறுகள் உள்ளதால் வாகனங்களில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.

ஆண்டிபட்டி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று சண்முகசுந்தரபுரம் மற்றும் ஜம்புலிபுத்தூர் பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

எனவே பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் இந்தச் சாலையை புதுப்பித்து‌ தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News