தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது!

லண்டன்: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து ஹைதர் அலியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது.

ஹைதர் அலி பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் 'ஏ' அணியான 'பாகிஸ்தான் ஷாஹீன்ஸ்' அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த ஹைதர் அலி, கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கைது செய்யப்பட்ட ஹைதர் அலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து விசாரணை முடியும் வரை ஹைதர் அலி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் இங்கிலாந்து சட்டங்களுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. விசாரணையின் போது அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தவுடன் அவர் மீது வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.