தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜாம்பஜாரில் வீட்டின் ஜன்னலை உடைத்து 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போதை ஆசாமி கைது: சிகிச்சைக்காக மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி

Advertisement

சென்னை: ஜாம்பஜாரில் வீட்டின் ஜன்னலை உடைத்து தனியாக இருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த போதை ஆசாமியை போலீசார் ைகது செய்தனர். மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மூதாட்டியின் மகன் நேற்று காலை தனது தாயை பார்க்க வீட்டிற்கு வந்த போது, அவரது தாய் படுக்கை அறையில் உடலில் ரத்த காயங்களுடன் ஆடைகள் கலைந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் உடனே தனது தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதிதார். பின்னர் சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்திய போது, மூதாட்டி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த போதை ஆசாமியான நாகராஜ் என்பவர் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, மூதாட்டியை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மூதாட்டிக்கு உடல் முழுவதும் ரத்த காயங்கள் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து, போலீசார் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாகராைஜ் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஜாம்பஜார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News