தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாணவிக்கு பாலியல் தொல்லை.. கராத்தே மாஸ்டர் குற்றவாளி என தீர்ப்பு .. தண்டனை விவரம் நாளை அறிவிப்பு!

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. சென்னை அண்ணாநகரில் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்புக் கலை பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் கடந்த 2014ல் தனது பயிற்சி பள்ளி மாணவிகளை நாமக்கல்லில் நடந்த போட்டியில் பங்குபெறுவதற்காக அழைத்து சென்றுள்ளார். போட்டி முடித்து வரும்போது தனது காரில் பயிற்சி பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால், பயந்துபோன அந்த மாணவி காரிலிருந்து இறங்கி ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார். அவரை தொடந்து ரயிலில் ஏறிய கெபிராஜ் மாணவியை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த 2021ல் கெபிராஜ் மீது பாலியல் தொந்தரவு, மிரட்டல் பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2021 மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கெபிராஜ், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மேலும் சில மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் 2021 ஜூன் 11ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் 32 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் காரத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் இன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News