பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு..!!
சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கெபிராஜ் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 2021ல் பதிவான வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்றும் சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்தது.