தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் இன்று கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Advertisement

சென்னை: ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் இன்று கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராயபுரம் மண்டலம் எழும்பூர், வேனல்ஸ் சாலையில் கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (18ம்தேதி) இரவு 10 மணி முதல் 19ம்தேதி காலை 10 மணி வரை (12 மணி நேரம்) மண்டலம் - 5 மற்றும் மண்டலம் 9-க்குட்பட்ட சில பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.

எனவே, ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இதற்காக ராயபுரம் மண்டல பகுதி அலுவலரை 8144930905 என்ற எண்ணிலும், தேனாம்பேட்டை மண்டல பகுதி அலுவலரை 8144930909 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement