தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்.கே.பேட்டை அருகே விவசாய நிலத்தில் தேங்கும் கழிவுநீர்: கதறும் விவசாயி வீடியோ வைரல்

 

Advertisement

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே விவசாய நிலத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயி கதறும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீ விலாசபுரம் கிராமத்தில் வசிப்பவர் தரணிபதி. விவசாயியான இவர், தனது குடியிருப்புக்கு அருகே சுமார் 3 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்துள்ளார். தற்போது, ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகமும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கழிவுநீர் கால்வாய் கட்டியுள்ளது. இந்த, கழிவுநீர் கால்வாயில் இருந்து நாள்தோறும் வெளியேறும் கழிவுநீர் இவருடைய சொந்தமான நிலத்தில் விட்டுள்ளனர். இதனால், அந்நிலத்தில் எந்தவித விவசாயமும் செய்ய முடியாமல் நிலத்தின் மண் மாறுபட்டுள்ளது. இதன் காரணமாக அந்நிலத்தில் பயிர் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனால், பாதிப்படைந்த விவசாயி தரணிபதி, கிராமத்தின் அருகாமையில் உள்ள ஓடை கால்வாயில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு கால்வாய் உள்ளது. அந்த, கால்வாயில் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேமிக்கவோ அல்லது அதை மாற்று ஏற்பாடு செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கன் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள், சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தன்னுடைய நிலத்தில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால், நிலத்தில் இறங்கி பணி செய்ய விவசாய தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால், இவருடைய நிலம் தரிசு நிலமாகவே இருந்து வருவதால், தனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும், அவர் என்ன செய்வது? யாரை அணுகுவது என்று தெரியாமல் தவித்து வருகிறார். விரைவில், குடும்பத்தாரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறொன்றும் தனக்கு தெரியவில்லை என்று கண்ணீரோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Related News