தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரியால் ரூ.1.89 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரியால் ரூ.1.89 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரித்ததன் காரணமாக வரி வசூல் அதிகரித்ததாக அரசு விளக்கமளித்துள்ளது.

Advertisement

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று, முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டு வருகிறது. இதனிடையே ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் கடந்தமாதம் 22ஆம் தேதி முதல் அமலானது.

ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் குறித்த அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரியால் ரூ.1.89 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரித்ததன் காரணமாக வரி வசூல் அதிகரித்ததாக அரசு விளக்கமளித்துள்ளது. 2024 செப்டம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.73 லட்சம் கோடியாகவும் 2025 ஆகஸ்டில் ரூ.1.86 லட்சம் கோடியாகவும் இருந்தது.

மொத்த வரி வருவாயில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் 6.8% அதிகரித்து ரூ.1.35லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதிப் பொருள்கள் மீதான வரி 15.6% அதிகரித்து ரூ.52,492 கோடியாக உயர்ந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கூடுதலாகச் செலுத்தப்பட்டு, திருப்பி அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை ரூ.28,657 கோடி என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது.

Advertisement

Related News