தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடுத்தடுத்து வந்த ‘சென்யார்’, ‘டிட்வா’ புயல்களால் 3 நாடுகளில் மழை வெள்ளத்தால் 900 பேர் பலி: ஆயிரக்கணக்கானோர் மாயம்; மீட்பு பணி தீவிரம்

கொழும்பு: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வீசிய இரட்டை புயல்களால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தொள்ளாயிரத்தை கடந்துள்ள சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சாதாரணமாக வீசும் காற்றை விட, இம்முறை மிகவும் அரிதாக உருவான ‘சென்யார்’ மற்றும் ‘டிட்வா’ ஆகிய இரு பெரும் புயல்கள் கோர தாண்டவம் ஆடியுள்ளன. இதன் காரணமாக இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழையும், அதனைத் தொடர்ந்து பயங்கரமான நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இயற்கையின் இந்தச் சீற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதுடன், சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுப் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ளன.

Advertisement

மோசமான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைவதில் ஆரம்பம் முதலே பெரும் சிக்கல் நீடித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி இந்த மூன்று நாடுகளிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டும் 442 பேர் உயிரிழந்துள்ளனர்; அங்கு துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போர்க்கப்பல்கள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் 334 பேர் பலியாகியுள்ள நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

தாய்லாந்தில் உள்ள ஹாட் யாய் நகரில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பெய்த கனமழையால் 170 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் மந்தமாக நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், ‘பாதிக்கப்பட்ட பகுதிகள் சேறும் சகதியுமாக உள்ளதால் இடிபாடுகளை அகற்றுவதிலும், மீட்புப் பணிகளிலும் பெரும் சவால் நீடிக்கிறது’ என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

Advertisement

Related News