தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘செங்கோட்டையன் பின்னணியில் பாஜ’: வேல்முருகன்

ஈரோடு: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். முன்னதாக, அவர் அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜ தலைமையிலான கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதுடன் தற்போது அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருக்கக்கூடிய செங்கோட்டையன், கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு நிலவுகிறது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லாமல் வலுவான கூட்டணியாக உள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பின்னணியில் பாஜ இருக்கலாம் என கூறப்படுகிறது. எனக்கு கிடைத்த தகவலின் படி, ஒன்றுப்பட்ட அதிமுக இருக்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்றும் தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement