தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்கெடுப்பில் பங்கேற்பாரா?.. செங்கோட்டையனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் மீண்டும் சமரச பேச்சு

Advertisement

சென்னை: செங்கோட்டையனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் மீண்டும் சமரச பேச்சு நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனை கூட்டங்களை செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். இதனிடையே சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று குரல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சபாநாயகரை பதவி நீக்கக்கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்த தீர்மானத்தில் செங்கோட்டையன் கையெழுத்திட்டிருந்தார்.

இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி நடத்திய ஆலோசனையை செங்கோட்டையன் புறக்கணித்தார். இபிஎஸ் உடனான எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இரண்டு முறை பங்கேற்காமல் செங்கோட்டையன் தவிர்த்தார். சட்டப்பேரவையில் தனது இருக்கை அருகே அமர்ந்துள்ள கடம்பூர் ராஜுவுடன் செங்கோட்டையன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்றபோது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் செங்கோட்டையன் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் செங்கோட்டையன் நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ள நிலையில் செங்கோட்டையனை சமரசம் செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது. செங்கோட்டையனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் எழுந்து சென்ற செங்கோட்டையனுடன் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சட்டப்பேரவையில் உள்ள அறையில் செங்கோட்டையனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Advertisement