தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கோட்டையன் தவெகவில் இணைந்த விவகாரம்; அவர் அதிமுகவில் இல்லை கருத்து கூற ஒன்றுமில்லை: எடப்பாடி பழனிசாமி பம்மல்

மதுரை: செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த நிலையில், அதிமுகவில் இல்லாத அவரைப்பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தார். நிகழ்ச்சி முடிந்து கிளம்பிய எடப்பாடி பழனிசாமியிடம், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அவர் அதிமுகவில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை. நன்றி வணக்கம்’’ எனக் கூறியவாறு கிளம்பினார்.

Advertisement

பின்னர் விமான நிலையம் செல்லும் வழியில் தனியார் தங்கும் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அங்கு மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, உதயகுமார், வளர்மதி, ராஜலட்சுமி மற்றும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ ஆகியோருடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது குறித்தும், அடுத்தபடியாக மேற்ெகாள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

பின்னர் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியிடம், நிருபர்கள், ‘‘நான் என்று நினைப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பார் என செங்கோட்டையன் கூறியுள்ளாரே’’ என கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘‘ஆண்டவன் தண்டிப்பார் என செங்கோட்டையன் கூறியது அவருடைய கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. உங்களுக்கும், எனக்கும் ஒரு கருத்து உள்ளது. அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. இது ஜனநாயக நாடு. ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவர் அதிமுகவில் இல்லை. அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்றார்.

Advertisement