தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்குன்றம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைக்கு பூமி பூஜை

புழல்: செங்குன்றம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகர் பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சோலையம்மன் நகர் பகுதி மக்கள், மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம், சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் ஆகியோருக்கு சாலையை சீர் செய்ய கோரிக்கை வைத்தனர்.
Advertisement

இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி தலைமையில் நடந்தது. இதில், ஒன்றிய குழு துணை தலைவர் வே.கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, துரைவேல், ஊராட்சித் துணைத் தலைவர் செல்வி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தார் சாலை போடுவதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி செயலர் லோகநாதன், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News