தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழகத்திற்கு வர வேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்துக்கு மாற்றம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவு

சென்னை: தமிழகத்திற்கு வர வேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவில் புதிதாக 4 செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக விரிவான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலை அமைப்பதற்கு சாதகமான அம்சங்கள் இருக்கும் மாநிலங்களில் ஆராயப்பட்டன.

அதன்படி, தெலங்கானாவில் செமி கண்டக்டர் ஆலை அமைக்க முன்னணி தனியார் நிறுவனம் விண்ணப்பம் சமர்பித்துள்ளது. ஆனால் இந்த ஆலையானது ஆந்திராவிற்கு மாறியுள்ளது. இதற்கு முன்பும் இதேபோல் வலுக்கட்டாயமாக ஆலைகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக தெலங்கானாவிற்கு வர வேண்டிய செமி கண்டக்டர் ஆலையானது குஜராத் மாநிலத்திற்கு சென்றுவிட்டது. மேலும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஆலையும் குஜராத்திற்கு கைமாறியது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related News