தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்வப்பெருந்தகை கிண்டல் அமெரிக்காவின் அதிபராக அண்ணாமலை முயற்சி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அரசியல் கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் வெறுப்பு, அவதூறுகளை பரப்பி வருகிறார். அவர் அநாகரிகமாக அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நான் சவால் விடுகிறேன். இந்து மகாசபை முதல் பாஜ வரை அண்ணாமலை பேசட்டும், நான் காங்கிரஸ் பற்றி பேசுகிறேன். என்னுடன், அண்ணாமலை விவாதத்திற்கு வரட்டும். நான் அதிமுகவில் இருந்தோ, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விட்டோ காங்கிரஸ் கட்சிக்கு வரவில்லை. தலித் இயக்கங்களில் பணியாற்றி காங்கிரஸ் இயக்கத்திற்கு வந்தேன். அண்ணாமலை லண்டனுக்கு சென்று, உலக அரசியலை கற்றுக் கொண்டு, அமெரிக்க அதிபர் ஆவதற்கு முயற்சி செய்கிறார் போல. வாழ்த்துகள். மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி அன்று, தமிழகத்தில் வெறுப்பு அரசியலை அகற்றுவதற்கும், அன்பை விதைப்பதற்கும், சாதி, மத மோதல்களை தடுப்பதற்கும், மதவாத சக்திகளை அடக்குவதற்கும், நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, காங்கிரஸ் மாநில துணை தலைவர் கோபண்ணா, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, காண்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisement

Advertisement