தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலை பண்பாட்டுத்துறை சார்பில் பாரம்பரிய கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு

*வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது

Advertisement

வேலூர் : தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு மற்றும் நேர்காணலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழகத்தின் பாரம்பரிய நலிவுற்ற கலைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான பயனாளிகள் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த நலிந்த தெருக்கூத்து கலைஞர்கள், நாதஸ்வர இசை உட்பட பாரம்பரிய இசைக்கலைஞர்கள், கரகாட்ட கலைஞர்கள், பொய்க்கால் குதிரை நடன கலைஞர்கள் என பாரம்பரிய நலிவுற்ற கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்குவதற்கான தகுதித்தேர்வு மற்றும் நேர்காணல் வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியக வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 250 பாரம்பரிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான நேர்காணலை கலை பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமை தாங்கி நடத்தினார். வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இதில் ஒவ்வொரு கலைஞரும் தங்களுக்கான கலைத்திறனை நிகழ்த்தி காட்டினர். இதற்கான மதிப்பீடுகளை சென்னை இசைக்கல்லூரி ஆசிரியர்கள் செய்தனர். இத்தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

Advertisement

Related News