தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஸ் பைப்லைன் பதிக்கும் பணியால் சேலையூர் - வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

Advertisement

தாம்பரம்: காஸ் பைப் லைன் அமைக்கும் பணியால் சேலையூர் - வேளச்சேரி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரே கேம்ப் ரோட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் பகுதியில், காஸ் பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தொடங்கியது. நேற்று அதிகாலையில் முடிய வேண்டிய நிலையில் பணிகள் முடிக்கப்படாமல் 200 மீட்டர் நீளத்திற்கு காஸ் பைப் சாலையிலேயே போட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதனால் சேலையூர் காவல் நிலையத்தில் இருந்து எதிரில் உள்ள ரங்கா தெரு வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் கேம்ப் ரோடு சந்திப்பு வரை சென்று சேலையூருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதேபோல் அகரம், திருவஞ்சேரி, சேலையூர் பகுதியில் இருந்து இந்திரா நகர் வழியாக வேளச்சேரி சாலை வரும் வாகனங்கள் வர முடியாமல் கேம்ப் ரோடு சந்திப்புக்கு வந்ததால் வேளச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ, மாணவிகளும், அலுவலகத்திற்குச் சென்றவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பைப்லைன் அமைக்கும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டதால் இரவில் பணிகளை முடிக்க முடியாததால் காலை நேரத்திலும் பணிகள் தொடர்ந்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் நேற்று காலை முதல் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

Related News