தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் அமல்ராஜ்க்கு மார்ச் 13 வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

Advertisement

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது மற்றும் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் அமல்ராஜ்க்கு மார்ச்13 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். இன்று விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட போலீசாரின் சம்மனை பாதுகாவலர் கிழித்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறி சீமான் வீட்டின் காவலாளி மற்றும் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் மீது 5 பிரிவுகளிலும், உதவியாளர் சுபாகர் மீது 3 பிரிவுகளிலும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சம்மனை கிழித்தது மற்றும் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் அமல்ராஜ்க்கு மார்ச்13 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் ஓட்டுநர் சுபாகருக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Advertisement

Related News