தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு: உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

Advertisement

 

 

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று, அதேப்போன்று 12 வாரத்துக்குள் போலீசார் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘ சீமான் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம் என்றார். இதையடுத்து விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘நாங்கள் புகாரை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளோம். இதற்கு மேல் சீமான் குறித்து எதுவும் விஜயலட்சுமி பேச மாட்டார் என உறுதி அளிக்கிறோம். எங்கள் தரப்பிலும் மன்னிப்பு கேட்டு பிரமாண தாக்கல் செய்துள்ளோம் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை அடிப்படையாக கொண்டு வழக்கை முடித்து வைக்கிறோம். முன்னதாக இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

 

நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் ஆகியோர் இருவரும் ஊடகங்களில் எதுவும் இதுதொடர்பாக இதற்கு மேல் எந்தவித பேட்டியோ அல்லது தகவலையோ வெளியிடக் கூடாது. மேலும் இந்த விவகாரத்தில் இருவரும் நிபந்தனையற்ற முறையில் வழக்கை வாபஸ் பெறுவதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடிப்படையாகக் கொண்டு தான் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கிறது. குறிப்பாக விஜயலட்சுமியை பொருத்தவரைக்கும் அவர் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருந்த விஷயத்தை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டனர்.

 

 

Advertisement