தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

Advertisement

மதுரை: மதுரை கே.கே. நகரை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மதுரை போலீஸ் துணை கமிஷனர் கரன் கரத்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் குறித்தும், கடும் வெறுப்பை விதைக்கும் விதமாக பேசியிருந்தார். வேற்று மதத்தை தவறாக பேசினால் பலர் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

இந்து மதத்தை தவறாக பேசினால் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் பேச்சு இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தும். மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது. தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதையுமே தவறாக பேசவில்லை. ஆனால், பவன் கல்யாண் அரசியல் சட்டப் பதவியில் இருந்துகொண்டு, அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்.

திருப்பதி லட்டு பிரச்னையில் எவ்வித தொடர்புமற்ற, சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக, வன்மத்தைக் கக்கி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக பேசி வருகிறார். தமிழ்நாட்டின் துணை முதல்வரை ஒருமையில் பேசி, இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் குற்றச்செயலில் ஈடுபட்ட, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement