தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுரண்டை அருகே பாசி ஊரணி குளத்தின் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு

*மீட்டுத்தரக்கோரி பாசன விவசாயிகள் போராட்டம்

Advertisement

சுரண்டை : சுரண்டை அருகே சாம்பவர்வடகரை பாசி ஊரணி குளத்தின் நீர்வழித்தடமான வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஆவேசமடைந்துள்ள விவசாயிகள் காணோம் என குற்றம்சாட்டியுள்ளதோடு அதை மீட்டுத்தருமாறு போராட்டம் நடத்தினர்.

சுரண்டை அருகே சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பாசி ஊரணி குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அத்துடன் பல்லாயிரக்கணக்கான தென்னைகளும் தண்ணீர் வசதி பெறுகின்றன.

ஆனால், கடந்த சில ஆண்டுங்களாக இக்குளத்திற்கு வரக்கூடிய நீர் வழித்தடமான வரத்து கால்வாய் சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் காணவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளதோடு அதை மீட்டுத்தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பாநதி அணையின் 13 நம்பர் மடை திறக்கப்படும் தண்ணீரானது கள்ளம்புளி குளத்திற்கு வரும். குளம் நிரம்பி குலையநேரி குளத்திற்கு செல்லக்கூடிய உபரி நீர் கால்வாய் உள்ளது. அந்த‌ கால்வாயிலிருந்து பாசி ஊரணி குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய நீர் வழித்தடம் முழுமையாக தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பகுதியில் சைக்கிளும் விவசாயம் செய்ய முடியவில்லை தென்னை மரத்தை பாதுகாக்க விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றுகின்றனர்.

எனவே நீர் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் பாசி ஊரணி குளம் மற்றும் குளத்திற்கு வரக்கூடிய நீர் வழித்தடத்தை சர்வே செய்து அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும்.

மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் போது அந்தப் பகுதியில் நீர்மட்டம் உயரும் விவசாயம் செழிக்கும் என விவசாயியும் ஊர் நாட்டாண்மையுமான வெங்கடேஷ் கூறினார்‌. மேலும் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாக முயற்சி செய்யாவிட்டால் குடும்ப அட்டை ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்து தொடர் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News