பிளே ஆப் சுற்றை உறுதி செய்வது யார்? லக்னோ-பெங்களூர் இன்று மோதல்
Advertisement
நடப்புத் தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா 11 ஆட்டங்களில் விளையாடி இருக்கின்றன.அவற்றில் ரிஷப் பன்ட் தலைமையிலான லக்னோ 5 வெற்றி, 6 தோல்விகளை சந்தித்து 10 புள்ளிகளை வசப்படுத்தி உள்ளது. கூடவே ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூர் 8 வெற்றி, 3 தோல்விகளை பார்த்து 16 புள்ளிகளை பெற்றுள்ளது.
இரு அணிகளும் அடுத்தச் சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன. எனினும் இன்றைய ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் பெங்களூர் முதல் அணியாக அடுத்தச் சுற்று வாய்ப்பை உறுதிச் செய்யும். லக்னோ கிரிக்கெட் அரங்கில் இந்த 2 அணிகளும் ஒரே ஒரு முறை மட்டுமே மோதி உள்ளன. அதில் பெங்களூர் 18 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
Advertisement