தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணிப்பேட்டை பாலாற்றில் குதித்த நபரை தேடும்பணி 2வது நாளாக தீவிரம்: தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை

 

Advertisement

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றில் குதித்த நபரை தேடும் பணி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரால் 2வது நாளாக இன்றும் நடந்தது. ராணிப்பேட்டை பாறை தெருவை சேர்ந்தவர் பிரசாந்த்(40). இவர் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் வெளியே சென்றுள்ளார். பாலாறு பழைய மேம்பாலத்தில் சென்றபோது பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு திடீரென ஆற்றில் குதித்துள்ளார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாற்றில் குதித்த பிரசாந்த்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் அதிகளவு ஓடுகிறது.

இதனால் பிரசாந்த் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டையில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு ேதடுதல் பணியை தொடங்கினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் தேடியும் பிரசாந்த் கிடைக்கவில்லை. மேலும் இரவாகி விட்டதாலும், ேபாதிய வெளிச்சம் இல்லாததாலும் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்தில் இருந்து 20 பேர் கொண்ட குழுவினரும் மீட்பு உபகரணங்களுடன் ராணிப்பேட்டைக்கு வந்தனர். இவர்கள் பாலாற்றில் குதித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினரும் தேடுதல் பணியை தொடர்ந்தனர்.

ஆர்டிஓ ராஜி, தாசில்தார் ஆனந்தன், திமுக மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி, மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் சிவா ஆகியோர் மீட்பு பணியை பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.

Advertisement

Related News