தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே துருபிடித்த பறிமுதல் வாகனங்களால் விஷபூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Advertisement

புழல்: பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே துருப்பிடித்த பறிமுதல் வாகனங்களால் விஷபூச்சுகள் நடமாட்டம் அதிகரிப்பதால், அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் மது பாட்டில்கள், செம்மரக்கட்டைகளை ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வரும் கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கடத்தி வருகின்றனர்.

இதனால், பாடியநல்லூர் சோதனை சாவடியில் போலீசார், அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு கஞ்சா மற்றும் செம்மரக்கட்டைகள், மதுபாட்டில்கள் கடத்தப்படும் ஏராளமான வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து பலரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அந்த வாகனங்கள் துருப்பிடித்து மக்கும் நிலையில் உள்ளது.

இவ்வாறு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் பாம்புகள், விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் இருக்கிறது. மேலும், இரவு நேரங்களில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள சோதனை சாவடிக்குள் விஷ பூச்சுகள் உலா வருவதால், காவலர்கள் பயத்துடன் பணியாற்றி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பழுதாகி துருப்பிடித்து கிடக்கும் வாகனங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News