தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜீவ்காந்தியை இழிவாக பேசிய வழக்கு: விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர்

Advertisement

விக்கிரவாண்டி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவாக பேசிய வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜர் ஆனார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை பற்றி இழிவாக பேசியதாக கூறி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர் ஆனார்.

இதன் காரணமாக விக்கிரவாண்டி நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையே இன்று விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி செயல்வீரர் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சீமான் பங்கேற்க உள்ளார். நாம் தமிழர் கட்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மாவட்ட மேற்கு தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் சுதன்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகியதால் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாகி விட்டது. இது போன்ற சூழ்நிலையில் செயல்வீரர்கள் கூட்டம் நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement