தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

மாமல்லபுரம்: வங்காள விரிகுடா கடலின் மத்திய மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் வரை இன்று காலை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை பகுதியிலேயே படகுகளை கயிறு கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் மீனவர்கள் வைத்துள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், வங்க கடலின் மேற்கு திசையை நோக்கி இன்று காலை 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், மாமல்லபுரம் கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. மாமல்லபுரம், கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடில்களுக்குமேல் போடப்பட்டிருந்த துணி பந்தல்களும் காற்றில் கிழிந்து அந்தரத்தில் பறக்கிறது. மாமல்லபுரம் கடற்கரைக்கு இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மக்களில் பலர், பலத்த காற்று வீசியதால் வீடுகளுக்கு அவசர அவசரமாக திரும்பினர். இதனால் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement

Related News