தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம்: பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை

 

Advertisement

சென்னை: சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . சென்னையின் முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றான காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் தற்போது கன மழையுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கமாக அமைதியாகக் காணப்படும் கடல், தற்போது சற்று சீற்றமாக இருக்கிறது .

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைப் பின்பற்றி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் படகுகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல், தங்களது படகுகளில் பழுது பார்க்கும் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் . இருப்பினும், சிறிய படகுகளில் உள்ள மீனவர்கள் மட்டுமே கரையிலிருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று சிறிய அளவில் மீன் பிடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . கிழக்கு திசையில் இருந்து நகரும் மேகக் கூட்டங்களால், நகரின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பதிவாகி வருகிறது .

கடல் சீற்றம் மற்றும் மழையின் காரணமாக, கடற்கரையோரப் பகுதிகள், மீன்பிடி துறைமுகம் மற்றும் வாகனங்கள் செல்லும் பகுதிகளிலும் பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனப் போலீசார் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement