தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழவேற்காட்டில் 5 நாட்களுக்கு முன் கடலில் மூழ்கிய மீனவர் சடலம் கரை ஒதுங்கியது

பொன்னேரி: பொன்னேரி அருகே பழவேற்காடு, திருமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் பிரேம்குமார் (30). மீனவர். இவர், கடந்த 31ம் தேதி தனது நண்பர்களுடன் இயந்திர படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். நடுக்கடலில் இன்ஜினின் துடுப்பு உடைந்து போனதால், பிரேம்குமார் கடலுக்குள் தவறி விழுந்து நீருக்குள் மூழ்கினார். அவருடன் சென்ற நண்பர்கள் கரைக்கு திரும்பி வந்து, இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மீனவர்களுடன் தீயணைப்பு துறையினர் கடந்த 5 நாட்களாக தேடியும் மீனவர் பிரேம்குமார் கிடைக்கவில்லை.
Advertisement

இந்நிலையில், நேற்று மாலை காட்டுப்பள்ளி அருகே காலாஞ்சி கடற்கரை பகுதியில் மீனவர் பிரேம்குமாரின் அழுகிய சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, அழுகிய நிலையில் மீனவர் பிரேம்குமாரின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அச்சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement