தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்படும் கரையோர வீடுகள்: கலெக்டரிடம் மீனவ மக்கள் புகார்

உத்தரகன்னடா: கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, கரையோர வீடுகள், அடித்து செல்லப்படுகின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள், கூடுதல் கலெக்டர் சாஜித் அகமது முல்லாவிடம் புகார் அளித்தனர். உத்தரகன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகா ஹர்வாடா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், கூடுதல் மாவட்ட கலெக்டர் சாஜித் அகமது முல்லாவை நேரில் சந்தித்து, புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

உத்தரகன்னடா மாவட்டம், உத்தரகன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகா ஹர்வாடா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தரங்கமேட்டில், கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகள், கடல் அலையில் அடித்து சென்றன. இதற்கு, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மழை காலங்களில் கடல் சீற்றத்தால் கரையோரங்களில் உள்ள பல வீடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள், வெள்ளத்தில் மூழ்கின.

தரங்கமேட் கிராமத்தின் பல பகுதிகள் கடல் அரிப்பால் அழிந்து விட்டன. பாரம்பரிய மீனவ குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. கடற்கரையைத் தவிர தங்குவதற்கு இடம் இல்லை. கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ குடும்பங்கள் கடல் அரிப்பால் அவதிப்படுகின்றனர். எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மழைக்காலத்துக்கு முன், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.